சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தென்னிந்திய நடிகைகளில் கடந்த 2015ம் ஆண்டு அதிக படங்களில் நடித்து முடித்தவர் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார் நித்யா மேனன். நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா இவர்கள் ஆரவாரமாக இருக்க அமைதியாக இந்த சாதனையை செய்து முடித்திருக்கிறார் நித்யா மேனன்.
தமிழில் மட்டும் அவர் ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ருத்ரமாதேவி, ஓகே கண்மணி, அப்பாவின் மீசை என 5 படங்களில் நடித்து முடிததிருக்கிறார். இதில் அப்பாவின் மீசை மட்டும் வெளிவரவில்லை. இது தவிர தெலுங்கில் மல்லி மல்லி இடி ராணி ரோஜு, சன் ஆஃப் சத்தியமுர்த்தி, ருத்ரமாதேவி(தெலுங்கு) படங்களில் நடித்துள்ளார், 110 டேய்ஸ் ஆஃப் லவ் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். ஆண்டுக்கு 8 படங்கள் என்றால் 45 நாட்களுக்கு ஒரு படத்தில் நடித்து சாதனை படைத்திருக்கிறார் நித்யாமேனன். இந்த ஆண்டு, '24, முடிஞ்சா இவனை புடி, மர்ம மனிதன்' ஆகிய தமிழ் படத்திலும், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தலா ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.