சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்நாடு மீண்டும் ஒரு மழை வெள்ள சேதத்தில் நேற்று முதல் தவிக்க ஆரம்பித்து விட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வந்த மழையை விட இப்போது பெய்து வரும் மழை அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அந்த சேதத்திலிருந்தே இன்னும் மீளாத தமிழகம் அடுத்த சேதத்திற்குத் தாங்குமா என்பது தெரியவில்லை.
ஆந்திராவில் வெள்ளம் ஏற்பட்ட போது யாருமே கேட்காமலே வாரி வழங்கிய தமிழ் நடிகர்கள் தமிழ்நாட்டில் வெள்ளம் ஏற்படும் போது வாய் மூடி இருப்பதேன் என திரையுலகத்திலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் குரல் உயர்ந்தது. அதன் காரணமாக சூர்யா, கார்த்தி, சிவகுமார், விஷால், சத்யராஜ், சிபிராஜ், தனுஷ், விக்ரம் பிரபு, பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்கள் நடிகர் சங்கத்தினரிடம் தங்களது வெள்ள நிவாரணத் தொகையை வழங்கியுள்ளனர்.
ஆனால், தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் முதன்மையானவர்கள் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோரும், பல முன்னணி நடிகைகளும் இதுவரை எந்தத் தொகையும் அளிக்காமல் அமைதி காத்து வருவது திரைப்பட ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களது படங்களை தமிழ்நாட்டில் ஓட வைக்கும் ரசிகர்களுக்காக அவர்கள் இன்னும் எதையும் செய்ய முன் வராதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.