சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பை கெளதம்மேனன் தொடங்கியிருந்த போதுதான், எதிர்பாராதவிதமாக அஜீத்தின் கால்சீட் அவருக்கு கிடத்தது. அதனால் சிம்பு படத்தை நிறுத்தி வைத்து விட்டு, அஜீத்தின் என்னை அறிந்தால் பட வேலைகளில் இறங்கினார் கெளதம்மேனன். அதனால் அந்த கேப்பில் இது நம்ம ஆளு, வாலு படங்களில் நடித்தார் சிம்பு.
அதேபோல் சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருந்தார் கோலிசோடா விஜய்மில்டன். ஆனால் அந்த நேரம் பார்த்து விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவே, டி.ஆர்., நடிக்கயிருந்த படத்தை தள்ளி வைத்து விட்டு, பத்து எண்றதுக்குள்ள படத்தை தொடங்கினார் விஜய்மில்டன். சில மாதங்களுக்கு முன்பே அந்த படம் திரைக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில், அடுத்து மீண்டும் கோலிசோடா மாதிரி ஒரு படத்தை விஜய்மில்டன் தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர் கிடப்பில் போட்டிருந்த டி.ஆர்., நடிக்கும் படவேலைகளையே தற்போது தொடங்கியிருக்கிறார். அந்த படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து கொண்டி ருக்கிறது. இதற்கிடையே படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகளிடமும் கால்சீட் பேசி வரும் விஜய்மில்டன், கோலிசோடா படத்தைப் போலவே டி.ஆர்., நடிக்கும் படத்தையும் தானே தயாரித்து இயக்குகிறார்.