சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஆச்சர்யங்கள், சட்டம் ஒரு இருட்டறை, சும்மா நச்சுன்னு இருக்கு, தொட்டால் தொடரும் போன்ற படங்களில் நாயகனாக நடித்தவர் தமன். தற்போது சேதுபூமி, யாழி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் தனது கேரக்டர் பற்றி தமன் கூறுகையில்,
சேது பூமி படம் கிராமத்து கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் இதுவரை நான் நடிக்காத ஒரு வித்தியாசமான கிராமத்து வேடத்தில் நடிக்கிறேன். அதேபோல், யாழி படம் நகரத்து கதையில் உருவாகி வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்கிறது. இந்த இரண்டு படங்களுமே என்னை பேச வைக்கும் வித்தியாசமான படங்கள். அதனால் இந்த படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.
அவரிடத்தில், மல்டி ஹீரோ, வில்லன் வேடங்களில் நடிப்பீர்களா? என்று கேட்டால்,
கண்டிப்பாக நடிப்பேன். என்னைப் பொறுத்தவரை மல்டி ஹீரோ கதைகளில் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன். ஒரு கதையில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்கும்போது ஒரு ஆரோக்யமான நடிப்பு போட்டி இருக்கும். மேலும், இன்றைய ரசிகர்களும் இந்த மாதிரி வெரைட்டியான பிலிம்களுக்கு நல்ல வரவேற்பு கொடுப்பார்கள். அதனால், மல்டி ஹீரோ கதைகளை நான் வரவேற்கிறேன். மேலும், இன்றைய தருவாயில் சில பிரபல ஹீரோக்களே வில்லனாக நடிக்கிறார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் வித்தியாசம் காட்ட முயற்சிக்கிறார்கள். அந்த வகையில், வளர்ந்துவரும் என்போன்ற நடிகர்கள் இப்போதைக்கு எந்த மாதிரியான வேடம் கிடைத்தாலும் தவிர்க்காமல் நடிக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்த கிடைக்கிற ஒவ்வொரு நல்ல சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால் வில்லன் வேடம் கிடைத்தாலும் நிச்சயமாக நடிப்பேன்.
வில்லன் நடிகர்களில் உங்களை கவர்ந்த நடிகர் யார்?
எம்.ஆர்.ராதா, டி.எஸ்.பாலையா, பிரகாஷ்ராஜ். இவர்களின் நடிப்பை நான் வெகுவாக ரசித்திருக்கிறேன். ஏற்று நடிக்கும் வேடத்தில் நூறு சதவிகித நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான நடிகர்கள். அதனால் என்னை நம்பி இயக்குனர்கள் நெகடீவ் ரோல் கொடுத்தால் அதை சிறப்பாக நடித்துக்கொடுக்க முயற்சி செய்வேன். இதுவரை நான் நடித்த படங்கள் எப்படியோ, ஆனால் இனிமேல் நான் நடிக்கிற ஒவ்வொரு படங்களும் பேசப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுமட்டுமன்றி, இன்றைய ரசிகர்கள், மாறுபட்ட நடிப்புக்கு கைதட்டல் கொடுக்கிறார்கள். அதனால், படத்துக்குப்படம் ஒவ்வொரு விதமான கேரக்டர்களில், கெட்டப்புகளில் என்னை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
மேலும், தற்போது நான் நடித்து வரும் படத்தில் மிகமிக வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறேன். அது வில்லத்தனம் கலந்ததுதான். ஆனால் இப்போதைக்கு அதைப்பற்றி சொல்லக்கூடாது. ஆனால் அந்த படத்தில் எனது கேரக்டர் பற்றிய சஸ்பென்ஸ் உடைகிறபோது இவரா இந்த மாதிரி வேடத்தில் நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யப்படுவார்கள் என்கிறார் தமன்.