பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
வாகை சூடவா, மெளனகுரு, மாசாணி, அம்மாவின் கைபேசி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தவர் இனியா. கேரளத்து நடிகையான இவர் ஆரம்பத்தில் கவர்ச்சிக்கு தடை போட்டிருந்தார். பின்னர் சில படங்களில் கவர்ச்சிக்கும் மாறினார். ஆனபோதும், அவரது மார்க்கெட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், பின்னர் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினார் இனியா. அதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் கிடைக்கத் தொடங்கின.
அந்த வகையில், தற்போது அவர் கைவசம், ஜித்தன்-2, காதல் சொல்ல நேரமில்லை, கரையோரம், வைகை எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ், மலையாளம், கன்னடம் என்று 10 படங்கள் வரை உள்ளன. இதில் கரையோரம் படத்தில் சிம்ரனுடன் இணைந்து நடித்திருக்கிறார் இனியா. இந்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், கரையோரம் படம் க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தில் சிம்ரன், நிகிஷா பட்டேலுடன் நானும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
இதற்கு முன்பு நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும் இது மாறுபட்ட வேடம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் எனது மார்க்கெட்டில் திருப்பம் ஏற்படும். மேலும், இந்த படத்தின் க்ளைமாக்சில் எனக்கும், சிம்ரனுக்குமிடையே ஒரு சண்டை காட்சி உள்ளது. அந்த காட்சியில் சிம்ரனை அடிப்பதற்கு நான் தயங்கினேன். அதையடுத்து சிம்ரன்தான் எனது தயக்கத்தை போக்கி என்னை நடிக்க வைத்தார். அதன்பிறகு அவரை அடிப்பது போன்ற ஷாட்களில் அதிரடியாக நடித்தேன். ஒரு சீனியர் நடிகையுடன் அந்த காட்சியில் நடித்தது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்கிறார் இனியா.