சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தற்போதைய கோலிவுட்டில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வரும் ஹீரோக்கள் நயன்தாரா, லட்சுமிமேனன் போன்ற ராசியான நடிகைகளுடன் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுடன் நடித்தால் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால், அவர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்து புக் பண்ண தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறார்கள்.
அந்த வகையில், நான் சிகப்பு மனிதன், தவிர லட்சுமிமேனன் நடித்த எல்லா படங்களுமே ஹிட் என்பதால் அவருக்கு கோலிவுட்டில் பிரகாசமான எதிர்காலம் உருவாகியிருக்கிறது. அதேபோல், நயன்தாரா ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். தனி ஒருவன், மாயா, நானும் ரவுடிதான் படங்களில் தொடர் வெற்றி அவரது மார்க்கெட் கடுமையாக உயர்த்தி விட்டுள்ளது.
அதன்காரணமாக, அடுத்தபடியாக தெலுங்கில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று நினைத்த நயன்தாரா அந்த திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு விட்டார். மாறாக, தமிழில் மாறுபட்ட கதைகளில் நடிப்பதில் கவனத்தை திருப்பியிருக்கிறார்.
இந்த நிலையில், ஈ படத்திற்கு பிறகு ஜீவாவுடன் நயன்தாரா நடித்து வரும் திருநாள் படத்தில் அவருக்கு பள்ளி ஆசிரியை வேடம். ஆனால் கிராமத்து தேவதையாக பாவாடை தாவணி கெட்டப்பில் படம் முழுக்க வளைய வருகிறாராம். நயன்தாராவின் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில், கலர்புல்லான லொகேசன்களில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம். அதோடு இந்த படத்தில் ரவுடியான ஜீவாவை திருத்தும் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம் நயன்தாரா. அந்த வகையில், பிளேடு போடும் ரவுடியான ஜீவாவை கும்பகோணத்து மக்கள் பிளேடு என்றுதான் அழைப்பார்களாம். நயன்தாராவை காதலிக்கும் அவர், ஒரு காட்சியில் அவருக்கு உதட்டு முத்தம் கொடுக்க முயற்சிப்பார்.
அப்போது, தனது வாய்க்குள் இருந்து ஒரு பிளேடை எடுத்து உதட்டில் வைப்பார் நயன்தாரா. அதைப்பார்த்து பிளேடுக்கே பிளேடா என்று ஷாக்காகி நிற்பாராம் ஜீவா. இந்த காட்சியில் ஒரு ரவுடி பெண் போன்றே பர்பாமென்ஸ் கொடுத்த நயன்தாராவை டோட்டல் யூனிட்டே கைதட்டி உற்சாகப்படுத்தினார்களாம். திருநாளில் டிரைலரில் இந்தக்காட்சி இடம்பெற்றுள்ளது.