சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பைக் ரேஸ் வீரரான அஜித் பலமுறை விபத்துகளில் சிக்கி அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். இந்நிலையில், ஆரம்பம் படத்தில் நடித்தபோது அவரது காலில் விபத்து ஏற்பட்டது. அப்போது அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறினர். ஆனால், அதன்பிறகு என்னை அறிந்தால், வேதாளம் படங்களில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கிய அஜித், அறுவை சிகிச்சையை தள்ளி வைத்திருந்தார். ஆனால், வேதாளம் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தபோது அஜித்தின் காலில் கடும் வலி ஏற்பட்டது. அதையடுத்து அவருக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சென்னை மற்றும் கோவையைச்சேர்ந்த சில மருத்துவ நிபுணர்கள் அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
அதையடுத்து ஓரிரு நாட்களிலேயே அஜீத் வீஜி திரும்பினார். இருப்பினும், அவரை சில மருத்துவர்கள் வீட்டில் இருந்தபடியே கவனித்து வருகின்றனர். அதோடு மூன்று மாதங்கள் வரை அஜித் கண்டிப்பாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனால் அஜித்தின் புதிய படம் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. மேலும், அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடந்திருப்பதை அடுத்து சினிமா நண்பர்கள் யாரும் அவரை பார்க்க அனுமதி இல்லை என்பதால் தொலைபேசி வாயிலாக அவரது மனைவி ஷாலினியிடம் விசாரித்து வருகிறார்கள். அதோடு, சென்னையிலுள்ள மருத்துவமனையில் அஜித்துக்கு அறுவை சிகிச்சை என்று செய்திகள் வெளியானதும் அவரது ரசிகர்கள் சில மருத்துவ மனைகளுக்கு விசிட் அடித்தனர்.
அதையடுத்து ஓரிரு நாட்களிலேயே அஜித் வீடு திரும்பி விட்டார் என்றதும், இப்போது அவரது ரசிகர்கள் அவரை பார்க்க அவரது வீட்டை முற்றுகையிட்டு வருகிறார்களாம். அப்படி செல்பவர்களிடம், டாக்டர்களின் ஆலோசனைப்படி முழு ஓய்வில் இருக்கிறார் அஜித். அதனால் அவரை பார்க்க யாருக்குமே அனுமதி இல்லை என்று எடுத்து சொல்லி அவர்களை திருப்பி அனுப்பி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.