என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு மதுரையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது. நடிகர் கஞ்சா கருப்புக்கும், சிவகங்கையை சேர்ந்த சங்கீதா என்ற பிஸியோதெரபி டாக்டருக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்ததது. அடுத்தடுத்த சினிமாக்களில் பிஸியாக இருந்த கஞ்சா கருப்பு, திருமணத்துக்கு பிறகு மலேசியாவுக்கு தேனிலவு சென்றார். இந்நிலையில் சங்கீதா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இன்று (20-04-2011) காலை சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து கஞ்சா கருப்பு மதுரைக்கு விரைந்து வந்தார். குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த அவர் நண்பர்கள் மற்றும் மருத்துவமனையில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.