சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஹீரோ, தயாரிப்பாளர் என்று உயர்ந்து இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவராகியிருக்கிறார் நடிகர் கருணாஸ். சிலதினங்களுக்கு முன்னர் கருணாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. அப்படி என்ன சொன்னார் கருணாஸ்...? அதாவது, "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை,எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது" என்ற கருத்து வெளியிடப்பட்டது. இக்கருத்தால் பெரும் சர்ச்சை நிலவியது. அதோடு கருணாஸை வலைபக்கத்தில் அஜித்தின் ரசிகர்கள் சரமாரியாக வசைபாடினர்.
இந்நிலையில் தான் அப்படி ஒரு கருத்தை கூறவே இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் கருணாஸ். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... என்னுடைய டுவிட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
யாரோ விஷமிகள் என்னுடைய டுவிட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன்.
யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்த்தை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி கமிஷ்னரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன். என்னை பற்றிய தவறான செய்திகளை கேள்விபடும் போது அந்த செய்தியை பிரசுரிக்கும் முன் எனக்கு தெரியபடுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார்.