சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றியடைந்த பிறகு பல இயக்குநர்களுக்கு சரித்திரப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஆக்ஷன் படங்களை எடுத்து ஆக்ஷன் பட இயக்குநராகப் பெயர் எடுத்த விஷ்ணுவர்தனும் இதற்கு விதிவிலக்கில்லை. ஆர்யா, கிருஷ்ணா இருவரையும் வைத்து சமீபத்தில் 'யட்சன்' என்ற படத்தை இயக்கினார் விஷ்ணுவர்தன்.
இந்நிலையில், தனது அடுத்த படத்தை பிரம்மாண்டமாக மட்டுமல்ல, வித்தியாசமாகவும் இயக்கத் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக, 9 ஆம் நூற்றாண்டில் காட்சிகள் நடைபெறும் வரலாற்றுப் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படியொரு படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம்விஷ்ணுவர்தனுக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாம்.
ஆரம்பம், யட்சன் போன்ற படங்களை இயக்கியதால் தனது கனவுப்படத்தை தள்ளி வைத்திருந்தாராம். தற்போது அதற்கான நேரம் தற்போது கைகூடியிருப்பதால், வரலாற்றுப் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக இறங்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.
முதல்கட்டமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில்கள் ஒவ்வொன்றாகச் சென்று, அதைப் பற்றிய வரலாற்று விவரங்களை சேகரித்து வருகிறாராம்.
இந்த வரலாற்றுப் படத்தை உருவாக்கும் பணியில் விஷ்ணுவர்தனுக்கு எழுத்தாளர் பாலகுமாரன் உதவிகள் செய்து வருகிறாராம். முழுமையான திரைக்கதையை உருவாக்கிய பின்பே, அப்படத்தில் யார், யார் நடிக்கிறார்கள், எந்தெந்த டெக்னீஷியன்கள் பணிபுரிவார்கள் என்பதை முடிவு செய்வாராம்.