சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஊரறிந்த விஷயம். இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலாய்த்துக் கொள்வார்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, பொது நிகழ்ச்சிகளிலும் ஒருவருக்கொருவர் வாரிக்கொள்ள தயங்கவே மாட்டார்கள். சக நடிகைகள் விஷயத்தில் ஆர்யா எப்பேற்பட்ட ஜொள்ளுப் பார்ட்டி என்பதை போட்டு உடைத்ததே விஷால்தான். அதேபோல் விஷாலுக்கும் லட்சுமிமேனனுக்கும் கெமிஸ்ட்ரி இருப்பதை போகிறபோக்கில் போட்டுத்தாக்கியதும் ஆர்யாதான். இப்படி விஷாலும் ஆரியாவும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் கலாய்த்துக்கொள்வார்கள்.
லேட்டஸ்ட்டாக ஒரு விழாவில் ஆர்யாவை செமத்தியாய் கலாய்த்தார் விஷால். மறைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் முதலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையிலுள்ளா காமராஜர் அரங்கில் நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசும்போது ஒரு சம்பவத்தை சொன்னார்.
'அவன் இவன்' படத்தின் படபிடிப்பில் இருக்கும்போது ஆர்யா என்னிடம் சத்தியஜித் ரே அவர்களை பற்றி நான் ஒரு நாள் பேசியதை நினைவில் வைத்து 'சத்யஜோதி' நிறுவனத்தை நினைவு கூர்ந்து பேசினார். நிஜமாகவே அவருக்கு சத்தியஜித் ரேயை தெரியவில்லை. அதேபோல் ஆர்யா, நடிகை அம்பிகாவை புதுமுகமா என்று ஒரு நாள் கேட்டு என்னை அதிர வைத்தார்.” என்று ஆர்யாவின் பொது அறிவு பற்றி விஷால் பேசியபோது எஸ்.எஸ்.ஆரின் நினைவேந்தல் நிகழ்ச்சி கலகலப்பாக மாறியது.