பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஐ படத்தை அடுத்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படம் எந்திரன்-2. இந்த படத்திலும் எந்திரன் படத்தில் நடித்த ரஜினியே நாயகனாக நடிக்கிறார். ஆனால் எந்திரனில் நடித்த ஐஸ்வர்யாராய் இப்படத்தில் நடிக்கவில்லை. மாறாக, பாலிவுட்டில் புகழ்பெற்ற சில நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வருகிறார் ஷங்கர். இந்நிலையில், ஏற்கனவே ரஜினியுடன் கோச்சடையானில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் கைத்ரினா கைப் ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன.
இந்த நிலையில், எந்திரன்-2 படத்தில் நடிப்பது பற்றி என்னிடம் இதுவரை யாரும் பேசவில்லை என்று தீபிகா படுகோனே செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ரஜினி குறிப்பிடத்தக்கவர். அவருடன் ராணா படத்திலேயே நான் நடிப்பதாக இருந்தது. அந்த படம் கைவிடப்பட்டபோதும் பின்னர் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் என்னை நடிக்க வைத்தார் செளந்தர்யா. அப்போது என்னையும் தனது மகள்களில் ஒருவராகவே நினைத்து பழகினார் ரஜினி. அதோடு அவரது எளிமை, ஆன்மீக சிந்தனை என்னை வெகுவாக கவர்ந்தது.
அதனால் அவருடன் அடுத்தடுத்து சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக நடித்து விட வேண்டும் என்கிற ஆசை எனக்குள் இருந்தது. இந்த நேரத்தில் ரஜினியுடன் எந்திரன்-2 படத்தில் என்னை நடிக்க வைக்க அப்பட டைரக்டர் ஷங்கர் என்னிடம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியானது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம். இதுவரை அந்த படம் சம்பந்தமாக யாருமே என்னை தொடர்பு கொண்டு பேசியதில்லை. ஒருவேளை அப்படி பேசினால் அதுகுறித்து முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார் தீபிகா படுகோனே.