நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒரு நொடியில். இதில் சிருஷ்டி டாங்கே தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். கே.கோடீஸ்வரராவ் தயாரிக்க எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார். தபஸ்ரீ என்ற இன்னொரு புதுமுகமும் நடிக்கிறார். இவர்கள் தவிர பிருத்வி, விஜயன், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாய்பர்வேஷ் இசை அமைக்கிறார். மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார்.
500 ஆண்டுகளாக ஒரு கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியவில்லை. மீறி நுழைகிறவர்கள் மாயமாகிவிடுகிறார்கள். அந்த ஊரை ஒரு அபூர்வசக்தி ஆள்கிறது. அந்த சக்தியை தான் அடைய நினைக்கிறான் ஒரு மந்திரவாதி. இதற்காக குழந்தைகளை நரபலி கொடுக்கிறான். இதனை ஒரு தொலைக்காட்சி நிருபர் கண்டுபிடிக்கிற கதை.
கதை திகிலாக இருந்தாலும் இயக்குனர் நம்பி இருப்பது கவர்ச்சியைத்தான். ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவும், அறிமுக ஹீரோயின் தபஸ்ரீயும் போட்டிபோட்டு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். சிருஷ்டி டாங்கே பெரிதாக வளராத காலத்தில் நடித்த படம் இப்போது வெளிவர இருக்கிறது.