தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒரு நொடியில். இதில் சிருஷ்டி டாங்கே தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். கே.கோடீஸ்வரராவ் தயாரிக்க எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார். தபஸ்ரீ என்ற இன்னொரு புதுமுகமும் நடிக்கிறார். இவர்கள் தவிர பிருத்வி, விஜயன், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாய்பர்வேஷ் இசை அமைக்கிறார். மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார்.
500 ஆண்டுகளாக ஒரு கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியவில்லை. மீறி நுழைகிறவர்கள் மாயமாகிவிடுகிறார்கள். அந்த ஊரை ஒரு அபூர்வசக்தி ஆள்கிறது. அந்த சக்தியை தான் அடைய நினைக்கிறான் ஒரு மந்திரவாதி. இதற்காக குழந்தைகளை நரபலி கொடுக்கிறான். இதனை ஒரு தொலைக்காட்சி நிருபர் கண்டுபிடிக்கிற கதை.
கதை திகிலாக இருந்தாலும் இயக்குனர் நம்பி இருப்பது கவர்ச்சியைத்தான். ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவும், அறிமுக ஹீரோயின் தபஸ்ரீயும் போட்டிபோட்டு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். சிருஷ்டி டாங்கே பெரிதாக வளராத காலத்தில் நடித்த படம் இப்போது வெளிவர இருக்கிறது.