வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒரு நொடியில். இதில் சிருஷ்டி டாங்கே தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். கே.கோடீஸ்வரராவ் தயாரிக்க எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார். தபஸ்ரீ என்ற இன்னொரு புதுமுகமும் நடிக்கிறார். இவர்கள் தவிர பிருத்வி, விஜயன், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாய்பர்வேஷ் இசை அமைக்கிறார். மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார்.
500 ஆண்டுகளாக ஒரு கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியவில்லை. மீறி நுழைகிறவர்கள் மாயமாகிவிடுகிறார்கள். அந்த ஊரை ஒரு அபூர்வசக்தி ஆள்கிறது. அந்த சக்தியை தான் அடைய நினைக்கிறான் ஒரு மந்திரவாதி. இதற்காக குழந்தைகளை நரபலி கொடுக்கிறான். இதனை ஒரு தொலைக்காட்சி நிருபர் கண்டுபிடிக்கிற கதை.
கதை திகிலாக இருந்தாலும் இயக்குனர் நம்பி இருப்பது கவர்ச்சியைத்தான். ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவும், அறிமுக ஹீரோயின் தபஸ்ரீயும் போட்டிபோட்டு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். சிருஷ்டி டாங்கே பெரிதாக வளராத காலத்தில் நடித்த படம் இப்போது வெளிவர இருக்கிறது.