தனுஷுக்கு கதை கூறிய டூரிஸ்ட் பேமிலி இயக்குனர்! | 'பிரேக் அவுட்' யோகலட்சுமியின் வெப் சீரிஸ் 22ல் வெளியாகிறது | இளையராஜா இசையில் பாடிய முதல் பாடல்: பாடகி நித்யஸ்ரீ மகிழ்ச்சி | வினோத நோய் : கரண் ஜோகர் விளக்கம் | அமேசான் ஓடிடி தளத்திலும் இனி விளம்பரங்கள் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சாந்தினி படம் | பிளாஷ்பேக் : பூனை கண்ணை மறைக்க லென்ஸ் வைத்து நடித்த சாதனா | பிளாஷ்பேக் : பொன்விழா ஆண்டில் அன்னக்கிளி, இளையராஜா | ஜெயசூர்யாவின் ஆடு 3 படப்பிடிப்பு துவங்கியது | ரஜினியின் நடிப்பை பார்த்துவிட்டு சத்யராஜ் சொன்ன வார்த்தை ; சிலிர்க்கும் லோகேஷ் கனகராஜ் |
புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ஒரு நொடியில். இதில் சிருஷ்டி டாங்கே தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள். கே.கோடீஸ்வரராவ் தயாரிக்க எம்.ஏ.சவுத்ரி இயக்குகிறார். தபஸ்ரீ என்ற இன்னொரு புதுமுகமும் நடிக்கிறார். இவர்கள் தவிர பிருத்வி, விஜயன், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாய்பர்வேஷ் இசை அமைக்கிறார். மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார்.
500 ஆண்டுகளாக ஒரு கிராமத்திற்குள் வெளியாட்கள் யாரும் நுழைய முடியவில்லை. மீறி நுழைகிறவர்கள் மாயமாகிவிடுகிறார்கள். அந்த ஊரை ஒரு அபூர்வசக்தி ஆள்கிறது. அந்த சக்தியை தான் அடைய நினைக்கிறான் ஒரு மந்திரவாதி. இதற்காக குழந்தைகளை நரபலி கொடுக்கிறான். இதனை ஒரு தொலைக்காட்சி நிருபர் கண்டுபிடிக்கிற கதை.
கதை திகிலாக இருந்தாலும் இயக்குனர் நம்பி இருப்பது கவர்ச்சியைத்தான். ஹீரோயின் சிருஷ்டி டாங்கேவும், அறிமுக ஹீரோயின் தபஸ்ரீயும் போட்டிபோட்டு கவர்ச்சியாக நடித்திருக்கிறார்கள். சிருஷ்டி டாங்கே பெரிதாக வளராத காலத்தில் நடித்த படம் இப்போது வெளிவர இருக்கிறது.