சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது ஒரு காமெடியனாக சினிமாவில் இடம்பிடித்தாலே போதும் என்பதுதான் சந்தானத்தின் ஆசையாக இருந்தது. ஆனால் வந்தவேகத்தில் அவர் வேகமாக வளர்ந்து நின்றார். அதோடு அவரது காமெடிக்கு இருந்த வரவேற்பு காரணமாக பல படங்களில் ஹீரோக்களுக்கு இணையான வேடங்களில் நடித்தார் சந்தானம். அப்படி நடித்த படங்கள் வெற்றி பெற்றதைப்பார்த்த சந்தானத்துக்கு, ஏன் நாமே ஹீரோவாக நடிக்கக்கூடாது என்ற ஆசை ஏற்பட்டது. அதன்பிறகுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோ அரிதாரம் பூசினார்.
ஆனால் அந்த படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. என்றாலும், உடனடியாக இனிமே இப்படித்தான் என்றொரு கதையை ரெடி பண்ணி தானே சொந்தமாக தயாரித்து நடித்தார் சந்தானம். அந்த கதையில் ஒரு கருத்தும் சொன்னார். காமெடி கலந்து கருத்து சொன்ன அந்த படம் வெற்றி பெற்றது. அதனால் நல்ல படங்களை கொடுத்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை சந்தானத்துக்கு ஏற்பட்டது.