அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் கைப்புள்ள என்ற கேரக்டரில் நடித்த வடிவேலு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நடத்தி வந்தார். அந்த பெயரில்தான் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்தார். அதையடுத்து அவர் பேசிய வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் உள்பட பல டயலாக்குகளில் தற்போது படங்கள் உருவாகி வருகின்றன.
இந்தநிலையில், சுந்தர்.சி நடித்த நகரம் மறுபக்கம் என்ற படத்தில் நாய் சேகர் என்றொரு வேடத்தில் நடித்திருந்தார் வடிவேலு. நாயகி ஜோதிர்மயியின் முறை மாமன் வேடத்தில் நடித்த வடிவேலுவை நேரில் பார்த்தாலே மயங்கி மயங்கி விழுவார் ஜோதிர்மயி. அதோடு அந்த படத்தில் எந்த தவறும் செய்யாமலேயே தன்னை ரவுடி என்று சொல்லிக்கொண்டு, போலீஸ் ஜீப்பில் ரவுடிகளோடு தானும் ஏறும் வடிவேலு, நானும் ரெளடிதான் ஜெயிலுக்குப்போறேன் என்று தப்பட்டம் அடித்தபடியே போலீஸ் ஜீப்பில் ஏறி செல்வார்.
அந்த வடிவேலுவின் கதாபாத்திரத்தை தழுவிதான் தற்போது விஜயசேதுபதி-நயன்தாரா இணைந்துள்ள நானும் ரெளடிதான் படத்தின் கதை உருவாகியிருக்கிறதாம். அந்த வகையில், ரெளடி வேடத்தில் நடித்திருக்கும் விஜயசேதுபதி நாய் சேகர் வடிவேலுப் போன்ற ரெளடிதானாம். அதனால் படம் முழுக்க செம காமெடியாம். இருப்பினும் ரசிகர்களுக்கு அது ஒரு சஸ்பென்சாக இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது அப்படத்தின் போஸ்டர்களில் விஜயசேதுபதி ரப் அண்ட் டப்பாக நிற்பது போன்ற போட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.