ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் 20 வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கி பேசுவார் இளையராஜா. சமீபத்தில் நடந்த என்னுள்ளில் எம்.எஸ்.வி என்ற நிகழ்ச்சியில்கூட வைரமுத்துபோன்று மிமிக்கிரி செய்து கவிதை பாடினார். மதுரையில் நடந்த விழா ஒன்றில் பாரதிராஜா, வைரமுத்துவை பற்றி பேச... கோபமடைந்த இளையராஜா பாரதிராஜாவோடு மனக் கசப்பானார். அன்றிலிருந்து இளையராஜா பாரதிராஜாவையும், பாரதிராஜா இளையராஜாவையும் மறைமுகமாக தாக்கி பேசிவருகிறார்கள்.
தற்போது பாரதிராஜா "வேதம் புதிது படத்துக்கு இசை அமைத்த தேவேந்திரன், இளையராஜாவை விட இசை பற்றி அதிகம் தெரிந்தவர். பெரிய புத்திசாலி, கர்நாட இசை, மேற்கத்திய இசையை முறைப்படி கற்றவர். இசை ஆசிரியர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் உயரத்தை தொட முடியவில்லை. வேதம் புதிது படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். அதிலிருந்தே இளையராஜாவுக்கும், எனக்கும் உறவு முறிய ஆரம்பித்தது" என்று கூறியுள்ளார்.
பாரதிராஜா குறிப்பிடும் தேவேந்திரன் வேதம் புதிதிற்கு பிறகு ஆண்களை நம்பாதே, கனம் கோர்ட்டார் அவர்களே, காலையும் நீயே மாலையும் நீயே, மீண்டும் சாவித்திரி, பாலு தம்பி மனசிலே, நானும் என் ஜமுனாவும் உள்பட கடந்த 29 வருடங்களில் 20படங்களுக்கும் குறைவாகவே இசை அமைத்துள்ளார்.