'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் 20 வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கி பேசுவார் இளையராஜா. சமீபத்தில் நடந்த என்னுள்ளில் எம்.எஸ்.வி என்ற நிகழ்ச்சியில்கூட வைரமுத்துபோன்று மிமிக்கிரி செய்து கவிதை பாடினார். மதுரையில் நடந்த விழா ஒன்றில் பாரதிராஜா, வைரமுத்துவை பற்றி பேச... கோபமடைந்த இளையராஜா பாரதிராஜாவோடு மனக் கசப்பானார். அன்றிலிருந்து இளையராஜா பாரதிராஜாவையும், பாரதிராஜா இளையராஜாவையும் மறைமுகமாக தாக்கி பேசிவருகிறார்கள்.
தற்போது பாரதிராஜா "வேதம் புதிது படத்துக்கு இசை அமைத்த தேவேந்திரன், இளையராஜாவை விட இசை பற்றி அதிகம் தெரிந்தவர். பெரிய புத்திசாலி, கர்நாட இசை, மேற்கத்திய இசையை முறைப்படி கற்றவர். இசை ஆசிரியர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் உயரத்தை தொட முடியவில்லை. வேதம் புதிது படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். அதிலிருந்தே இளையராஜாவுக்கும், எனக்கும் உறவு முறிய ஆரம்பித்தது" என்று கூறியுள்ளார்.
பாரதிராஜா குறிப்பிடும் தேவேந்திரன் வேதம் புதிதிற்கு பிறகு ஆண்களை நம்பாதே, கனம் கோர்ட்டார் அவர்களே, காலையும் நீயே மாலையும் நீயே, மீண்டும் சாவித்திரி, பாலு தம்பி மனசிலே, நானும் என் ஜமுனாவும் உள்பட கடந்த 29 வருடங்களில் 20படங்களுக்கும் குறைவாகவே இசை அமைத்துள்ளார்.