மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் 20 வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கி பேசுவார் இளையராஜா. சமீபத்தில் நடந்த என்னுள்ளில் எம்.எஸ்.வி என்ற நிகழ்ச்சியில்கூட வைரமுத்துபோன்று மிமிக்கிரி செய்து கவிதை பாடினார். மதுரையில் நடந்த விழா ஒன்றில் பாரதிராஜா, வைரமுத்துவை பற்றி பேச... கோபமடைந்த இளையராஜா பாரதிராஜாவோடு மனக் கசப்பானார். அன்றிலிருந்து இளையராஜா பாரதிராஜாவையும், பாரதிராஜா இளையராஜாவையும் மறைமுகமாக தாக்கி பேசிவருகிறார்கள்.
தற்போது பாரதிராஜா "வேதம் புதிது படத்துக்கு இசை அமைத்த தேவேந்திரன், இளையராஜாவை விட இசை பற்றி அதிகம் தெரிந்தவர். பெரிய புத்திசாலி, கர்நாட இசை, மேற்கத்திய இசையை முறைப்படி கற்றவர். இசை ஆசிரியர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் உயரத்தை தொட முடியவில்லை. வேதம் புதிது படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். அதிலிருந்தே இளையராஜாவுக்கும், எனக்கும் உறவு முறிய ஆரம்பித்தது" என்று கூறியுள்ளார்.
பாரதிராஜா குறிப்பிடும் தேவேந்திரன் வேதம் புதிதிற்கு பிறகு ஆண்களை நம்பாதே, கனம் கோர்ட்டார் அவர்களே, காலையும் நீயே மாலையும் நீயே, மீண்டும் சாவித்திரி, பாலு தம்பி மனசிலே, நானும் என் ஜமுனாவும் உள்பட கடந்த 29 வருடங்களில் 20படங்களுக்கும் குறைவாகவே இசை அமைத்துள்ளார்.