வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
கன்னடத் திரையுலகின் முக்கிய குடும்பமான மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேத்தியும், நடிகர் சிவராஜ்குமாரின் மகளான நிருபமாவின் திருமணம் நேற்று காலை பெங்களூரு பேலஸ் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்தத் திருமணத்திற்கான அழைப்பிதழைப் பெறுவதற்காக சிவராஜ்குமாரின் ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டியுள்ளனர். அதை அறிந்த 'பிளாக்' மார்க்கெட்டினர், ஒரிஜனல் அழைப்பிதழ் போலவே போலியான அழைப்பிதழ்களை அச்சிட்டு 10000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை விற்றிருக்கின்றனர். அதைப் பற்றிக் கேள்விப்பட்ட சிவராஜ்குமார் குடும்பத்தினர் திருமண அரங்கில் பலத்த பாதுகாப்பைப் போட்டுள்ளனர். எண்ணற்ற காவல் துறையினருடன், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினரும் நேற்றைய திருமணத்தில் பாதுகாப்பைக் கவனித்துள்ளனர். நேற்று காலை பெங்களூரு நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறியிருக்கிறது.