முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
இந்தக்காலத்தில் ஷங்கர், ராஜமௌலி போன்ற இயக்குநர்கள் பிரமாண்டமான படம் எடுப்பவர்கள் என்றால் அந்தக்காலத்தில் இப்படி எடுப்பவராகப் பி.ஆர்.பந்துலுவைக் கூறலாம்.
பந்துலு இயக்கியவற்றில் பிரமாண்டமான படங்கள் நிறையவே வந்துள்ளன. அவை மீண்டும் இந்தக்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப் பொலிவுடன் வெளியாகி வெற்றியும் பெறுகின்றன. பந்துலு இயக்கிய சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படம் மீண்டும் 50 ஆண்டுகளுக்குப்பின் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. இப்படி மீண்டும் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படமும் சோடை போகவில்லை.
கடந்த வெள்ளியன்று வெளியான சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எந்த அளவுக்கு வரவேற்பு என்றால், சிவாஜி கட்அவுட்டுக்கு மாலை மரியாதை, பாலாபிஷேகம், பத்தாயிரம் வாலா பட்டாசு ,டிராபிக்ஜாம் என்று சாந்தி தியேட்டரே திமிலோகப்பட்டது.
நாம் இருப்பது 2015-லா 1959-லா என்று சந்தேகப்படும் அளவுக்கு சிவாஜி பக்தர்கள் கலக்கி வருகிறார்கள். பாகுபலி காலத்திலும் பந்துலுவுக்கு உள்ள மவுசு ஆச்சரியப்பட வைக்கிறது.