கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்ட சேலம் துரை சாமி ஐயா சுந்தரம், சுதந்திர போராட்ட வீரராகவும் நாடக நடிகராகவும் இருந்தார். தனது 12 வயது முதல் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக சபாவில் நடிக்க ஆரம்பித்தார். 1942 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது 'கவியின் கனவு' என்ற நாடகத்தை எழுதினார்.
பின்னர் சக்தி நாடக சபாவை தொடங்கி 'கவியின் கனவு' நாடகத்தை அரங்கேற்றினார். சுதந்திர இந்தியா பற்றிய இந்த நாடகம் 1500 முறை மேடைகளில் நடத்தப்பட்டது. நாடகத்தில் சிவாஜி கணேசன். எம் என் நம்பியார் எஸ்வி சுப்பையா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்தனர்.
நாகப்பட்டினத்தில் அந்த நாடகம் நடைபெற்ற போது 'கவியின் கனவு ஸ்பெஷல் சிறப்பு ரயில்' திருச்சியில் இருந்து இயக்கப்பட்டது. அந்த அளவிற்கு அந்த நாடகம் பேசப்பட்டது. இதனை திரைப்படமாக்க எஸ்.டி.சுந்தரம் விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.




