சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

எஸ்.டி.சுந்தரம் என்று அழைக்கப்பட்ட சேலம் துரை சாமி ஐயா சுந்தரம், சுதந்திர போராட்ட வீரராகவும் நாடக நடிகராகவும் இருந்தார். தனது 12 வயது முதல் நவாப் ராஜமாணிக்கத்தின் நாடக சபாவில் நடிக்க ஆரம்பித்தார். 1942 சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தஞ்சாவூர் சிறையில் 9 மாதங்கள் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது 'கவியின் கனவு' என்ற நாடகத்தை எழுதினார்.
பின்னர் சக்தி நாடக சபாவை தொடங்கி 'கவியின் கனவு' நாடகத்தை அரங்கேற்றினார். சுதந்திர இந்தியா பற்றிய இந்த நாடகம் 1500 முறை மேடைகளில் நடத்தப்பட்டது. நாடகத்தில் சிவாஜி கணேசன். எம் என் நம்பியார் எஸ்வி சுப்பையா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்தனர்.
நாகப்பட்டினத்தில் அந்த நாடகம் நடைபெற்ற போது 'கவியின் கனவு ஸ்பெஷல் சிறப்பு ரயில்' திருச்சியில் இருந்து இயக்கப்பட்டது. அந்த அளவிற்கு அந்த நாடகம் பேசப்பட்டது. இதனை திரைப்படமாக்க எஸ்.டி.சுந்தரம் விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை.