சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்குத் திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னையைச் சேர்ந்த த்ரிஷா சில வருடங்கள் முன்னர் வரை தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். அவருக்கு அடுத்து சமந்த கடந்த சில வருடங்களாக நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். த்ரிஷாவுக்கு திரும்பவும் மார்க்கெட் சூடுபிடித்துள்ளது, தமிழ், தெலுங்கில்சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமந்தா, தற்போது தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அவர்களைத் தொடர்ந்து சென்னைப் பெண்ணான ரெஜினா கஸான்ட்ரா தெலுங்கில் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கின் பிரபல இளம் இயக்குனரான ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'சுப்பிரமணியபுரம் ஃபார் சேல்' என்ற படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடித்து வருகிறார். அவர், ரெஜினா விரைவில் தெலுங்குத் திரையுலகில் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பார் எனப் பாராட்டியுள்ளார். 'சிவா மனசுலோ ஸ்ருதி' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான ரெஜினா கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்குத் திரையுலகில் முன்னேறி வருகிறார். சமந்தா, தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருவதால், ரெஜினாவின் தெலுங்கு நம்பர் 1 கனவு நிறைவேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.