22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகை சினேகாவுக்கு நேற்று இரவு 1.55 மணிக்கு, சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தனது நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகா, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவை காதலிக்க தொடங்கிய சினேகா, 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த சினேகா அதன்பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகா கர்ப்பமானார். தொடர்ந்து கடந்த ஜூன் 18ம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சினேகாவுக்கு வளைகாப்பும் நடந்தது.
இந்நிலையில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சுகப்பிரசவம் ஆக வழியில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு 1.55 மணியளவில் சினேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் எடை 2.08 கிலோ இருப்பதாகவும், தற்போது சினேகாவும், குழந்தையும் நன்றாக இருப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.