‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி |
நடிகை சினேகாவுக்கு நேற்று இரவு 1.55 மணிக்கு, சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தனது நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகா, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவை காதலிக்க தொடங்கிய சினேகா, 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த சினேகா அதன்பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகா கர்ப்பமானார். தொடர்ந்து கடந்த ஜூன் 18ம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சினேகாவுக்கு வளைகாப்பும் நடந்தது.
இந்நிலையில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சுகப்பிரசவம் ஆக வழியில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு 1.55 மணியளவில் சினேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் எடை 2.08 கிலோ இருப்பதாகவும், தற்போது சினேகாவும், குழந்தையும் நன்றாக இருப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.