Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினேகா - பிரசன்னா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

11 ஆக, 2015 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Baby-boy-for-Sneha---Prasanna-couples

நடிகை சினேகாவுக்கு நேற்று இரவு 1.55 மணிக்கு, சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. தனது நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சினேகா, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவை காதலிக்க தொடங்கிய சினேகா, 2012ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்த சினேகா அதன்பின்னர் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகா கர்ப்பமானார். தொடர்ந்து கடந்த ஜூன் 18ம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சினேகாவுக்கு வளைகாப்பும் நடந்தது.


இந்நிலையில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட உடனடியாக சென்னை, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சுகப்பிரசவம் ஆக வழியில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு 1.55 மணியளவில் சினேகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.


குழந்தையின் எடை 2.08 கிலோ இருப்பதாகவும், தற்போது சினேகாவும், குழந்தையும் நன்றாக இருப்பதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)