சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ்நாட்டு ரசிகர்கள் எல்லாம் நடிகர் அர்ஜுனை தமிழ் நடிகர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க, கர்நாடகாவைப் பொருத்தவரை இன்னும் அவர் கன்னடப்பட ஹீரோதான். காரணம்... அவ்வப்போது கன்னடப் படங்களில் நடித்து தன்னை கன்னடப்பட ஹீரோவாகவே அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக்கொண்டு வருகிறார். நேரடி கன்னடப்படங்களில் நடிப்பது மட்டுமல்ல, தான் நடிக்கும் தமிழ்ப் படங்களையும் கூட கன்னடத்தில் வெளியிடும் வகையில் செய்துவிடுகிறார்.
சசிதரூர் மனைவியின் மர்ம மரணத்தைப் பற்றிய கதை அம்சம் கொண்ட ஒரு மெல்லிய கோடு படம் தமிழில் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. உண்மையில் இந்தப்படம் கன்னடத்திலேயே எடுக்கப்படுகிறது. கன்னடத்திலும் இப்படம் வெளியிடப்பட உள்ளது. அதனாலேயே இப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பை பெங்களூருவில் நடத்தி உள்ளனர்.
அருண் வைத்தியநாதன் என்பவர் தற்போது அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்தையும் கன்னடத்தில் வெளியிடும் திட்டத்தில் பெங்களூருவில் படப்பிடிப்பு நடத்தும்படி சொல்லிவிட்டாராம் அர்ஜுன். இப்படியாக தன்னைத் தேடி வரும் தமிழ்ப்படங்களை எல்லாம் கன்னடத்திலும் தனக்கு கொஞ்சம் மவுசு இருப்பதால் கன்னடப்படமாக மாற்றி வருகிறார் அர்ஜுன்.