வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
'புலி' படத்தில் இளவரசி கேரக்டரில் ஹன்சிகா நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த கேரக்டரில் நடித்து முடிப்பதற்குள், படாதபாடு பட்டு விட்டாராம் அவர். தினமும், 'மேக் அப்'பிற்காக மட்டும், மூன்று மணி நேரம் அவருக்கு செலவானதாம். இது, மட்டுமல்லாமல், பட்டு புடவை, கிலோ கணக்கில் தங்க நகைகள் ஆகியவற்றையும் அணிந்து நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ரொம்பவே சிரமப்பட்டுள்ளார் ஹன்சிகா. இதுகுறித்து, அவர் கூறுகையில், 'என் திரையுலக வாழ்க்கையில், இதுபோன்ற கேரக்டர் இனி எனக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். நான் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும், படம் வெளியானதும் பலன் கிடைத்து விடும்' என, கூறியுள்ளார்.