ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தபோது, அவருக்கு உற்சாகமூட்டியவர்களில் மறைந்த இயக்குநர் ராமநாராயணும் ஒருவர். அது மட்டுமல்ல, எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாக நடிப்பதைவிட டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து ரசிகர்களின் பல்ஸ் பார்த்து அடுத்த படத்தில் ஸோலோ ஹீரோவாக நடிப்பது நல்லது என்று அட்வைஸும் செய்தாராம். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட சந்தானம், சேது என்பவரை ஹீரோவாக வைத்துக் கொண்டு அவருக்கு நிகரான வேடத்தை தனக்கு ஒதுக்கிக்கொண்டு ஆரம்பித்த படம்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா. சந்தானம் இந்தப்படத்தைத் தயாரித்தபோது அவருக்கு சினிமா வியாபாரம் கொஞ்சமும் தெரியாது. எனவே ராமநாராயணனை அணுகினார். அவரது வேண்டுகோளை தட்ட முடியாமல் தானே தயாரிக்கும் படம்போல் எல்லாவகையிலும் உடனிருந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தைத் தயாரித்துக் கொடுத்ததோடு, அந்தப் படத்தை உலகம் முழுக்க வெளியிடவும் செய்தார்.