சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தியும், மம்முட்டியும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற ஒரு தகவலும், கார்த்தியும், துல்கல் சல்மானும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற மற்றொரு தகவலும் கோலிவுட்டில் பரவி வருகிறது. நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் சொன்னார்கள். மகேஷ்பாபு, நாகார்ஜுனா நடிக்கப் போவதாக இருந்த படத்தில்தான் இப்போது இவர்கள் நடிக்கப் போகிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் அது பற்றி வாயே திறக்கவில்லை.
'ஓ காதல் கண்மணி' படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியுடன் இருக்கும் மணிரத்னம் விரைவில் புதிய படத்தை ஆரம்பித்து விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் என்பது மட்டும் உறுதி என்கிறார்கள். இதற்கான கதையைக் கூட அவர் ஏற்கெனவே தயார் செய்து விட்டாராம். இந்தப் படத்திற்கு 'கோமாளி' என்ற பெயரிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மணிரத்னம் படத்தைப் பொறுத்தவரையில் ஒரு புகைப்படம் வெளிவருவது கூட சிதம்பர ரகசியமாகவே இருக்கும். அவர் படம் பற்றி தகவல் கசியும் அனைத்து வழிகளையும் அவர் இரும்புக்கரம் கொண்டு தடுத்து வைத்திருப்பார்.
எப்படியும் சீக்கிரம் அறிவிப்பு வரும் என்று மட்டும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.