சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
என்ன த்ரிஷாவுக்கு அஜீத் குடை பிடித்தாரா? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா. ஆனால் அதுதான் உண்மை. இது இப்போது நடந்தது அல்ல, சில வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அதாகப்பட்டது, கீரிடம் படத்தில் இடம்பெற்ற அக்கம் பக்கம் -என்ற பாடல் கேரளாவில் உள்ள ஒரு ஏரியில் படமாக்கப்பட்டதாம்.
அப்போது, ஏரிக்குள் அஜீத்-த்ரிஷா இருவரும் ஒரு போட்டில் அமர்ந்தபடி அந்த பாடலில் நடித்துள்ளனர். ஏரிக்கு வெளியே நின்று கேமரா யூனிட் அந்த காட்சியை படமாக்கியுள்ளனர். ஆனால், அப்போது ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் ஏரிக்கு வெளியே நிற்கும் தனது உதவியாளரை ஏரிக்குள் வரவைத்து டச்சப் செய்து கொண்டதோடு, அடுத்த ஷாட்டுக்கு கேமரா யூனிட் ரெடியாகிறது வரை உதவியாளரை தனக்கு குடை பிடிக்க சொன்னாராம் த்ரிஷா. இதனால் அவர் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் ஏரிக்குள் செல்வதும், பின்னர் வெளியேறுவதுமாக இருந்திருக்கிறார். இதனால் அவர் சென்று வரும் ஒவ்வொரு நேரத்திற்காகவும் யூனிட்டே காத்திருந்து பின்னர் படமாக்கியிருக்கிறார்கள்.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த அஜீத், ஒருமுறை ஏரிக்கு வெளியே நின்ற உதவியாளரை த்ரிஷா அழைத்தபோது அவரிடமிருந்த குடை மற்றும் டச்சப் பொருட்களை வாங்கிக்கொண்டு அவரை அனுப்பிவிட்டு, தானே த்ரிஷாவுக்கு குடை பிடித்திருக்கிறார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த த்ரிஷா, நீங்கள் எதற்காக குடை பிடிக்கிறீர்கள் என்று கேட்க, ஒவ்வொரு முறையும் உனது உதவியாளர் ஏரிக்குள் வந்து வந்து செல்ல வெகுநேரமாகிறது அதுவரை மொத்த யூனிட்டும் வெளியில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அத்தனை பேரை காத்திருக்க வைக்க வேண்டாம் என்பதற்காத்தான் நானே குடை பிடிக்கிறேன். எனக்கு இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை என்றாராம்.
ஆனால், அஜீத் அப்படி தனக்கு குடை பிடித்ததை மற்றவர்கள் சுற்றி நின்று கோபத்துடன் பார்த்ததைக்கண்ட த்ரிஷா, எனக்கு நீங்கள் குடை பிடிக்க வேண்டாம் என்று சொல்லி அந்த குடையை ஏரிக்குள் தூக்கிப்போட்டு விட்டாராம். அதன்பிறகுதான் அஜீத்தையே குடை பிடிக்க வைத்து விட்டாரே என்று கோபத்துடன் த்ரிஷாவைப்பார்த்த அத்தனை முகங்களின் கோபமும் அடங்கியதாம்.