சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
80களின் கனவு கன்னியாக நிகழ்ந்தவர் ஜெயப்ரதா, 200 படங்களுக்குமேல் ஹீரோயினாக நடித்தவர். அரசியலில் நுழைந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். அவர் தற்போது தனது மகன் சித்து என்கிற சித்தார்த்தை உயிரே உயிரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். தமிழ் சினிமாவை விட தெலுங்கு, இந்தி சினிமாவில்தான் அவருக்கு செல்வாக்கு அதிகம். அப்படி இருந்தும் அவர் தன் மகனை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறார்.
இது பற்றி ஜெயப்பிரதா கூறியதாவது: மற்ற மொழிகளை ஒப்பிடும்போது தமிழ் படத்தில் நான் நடித்தது மிகவும் குறைவுதான். நினைத்தாலே இனிக்கும், சலங்கைஒலி படங்களையும், அதில் நடித்த என்னையும் தமிழக மக்கள் தங்கள் மனதில் வைத்திருக்கிறார்கள். இப்பவும் நான் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் நினைத்தாலே இனிக்கும் படத்தில் தலையாட்டுவது போல ஆட்டச் சொல்லி பார்த்து மகிழ்கிறார்கள். இந்த அளவிற்கு அன்பான மக்களை நான் வேறெங்கும் பார்த்ததில்லை. என் மீது கொண்டிருக்கும் அன்பை என் மகனுக்கும் தருவார்கள் என்ற நம்பிக்கையில்தான் சித்துவை தமிழ் படத்தில் அறிமுகப்படுத்துகிறேன.