சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜூனா பிக்சர்ஸ் பிரைவட் லிமிடெட் சார்பில், என்.சண்முகசுந்தரம், கே. முகமது யாசின் தயாரிக்கும் திரைப்படம் டெய்சி. புதுமுக இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லீன் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா அனிதா ரெட்டி மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர். உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட்-திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத். டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது.
CH மோகன்ஜி கலையமைப்பில், ஹரி ஹரனின் படத்தொகுப்பில், அறிமுக ஒளிப்பதிவாளர் மணிஷ் மூர்த்தி ஒளிப்பதிவில், புதுமுகம் சிவ சரவணன் இசையில், எம். ஆர். கே வுடன் இணைந்து கதை இயற்றி இயக்குனராக அறிமுகமாகிறார் ஸ்ரீநாத் ராமலிங்கம்.
படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீநாத் கூறுகையில் "ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்றக் கூற்றை உறுதி படுத்தும் கதை இது. டெய்சி. அன்புக்காக ஏங்கி அலை பாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியை பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்ளுக்கு தேவையான கருத்தைக் கொண்ட கதை என்பதால் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் கலந்து உருவாக்கியுள்ளோம்".