சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்திய சினிமாவின் டாப் மோஸ்ட் கிராபிக்ஸ் டிசைனர் ஸ்ரீனிவாஸ் மோகன். சிவாஜி, ஐ, எந்திரன், நான் ஈ படங்களுக்கு கிராபிக்ஸ் பணியாற்றியவர். தப்போது பாகுபலி படத்தில் பணியாற்றி வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இனி வரும் காலங்களில் பிரமாண்ட படங்களே மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரும். அப்படிப்பட்ட பிரமாண்ட படங்களுக்கு கிராபிக்ஸ் முக்கியம். எல்லாவற்றையும் நேரடியாக படம்பிடிக்க நிறைய செலவாகும். அதையே கிராபிக்சில் செய்தால் செலவு குறையும். கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகளை செய்ய தற்போது தொழில்நுட்பம் வந்து விட்டது. பாகுபலி படத்திற்கு பிறகு கிராபிக்சில் வலிமை அனைவருக்கும் தெரிய வரும். நடிகர் நடிகைகள் தவிர மற்ற அனைத்திலுமே கிராபிக்சின் பங்கு இருக்கும்.
சிறிய பட்ஜெட் படங்களில்கூட கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகள் இருக்கும். தற்போது சினிமாவில் 24 கலை பிரிவுகள் இருக்கிறது. தற்போது 25வது கலைப் பிரிவாக கிராபிக்ஸ் இணைந்துள்ளது. இனி சினிமாவில் கிராபிக்ஸ் தவிர்க்க முடியாத, பிரிக்க முடியாத அங்கமா இருக்கும். என்றார்.