சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நயன்தாரா நடித்துள்ள மாஸ் படம் இன்று வெளியாகி உள்ளது. மாஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இப்படம் தணிக்கை செய்யப்பட்டபோது மாஸ் என்கிற மாசிலாமணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. மாஸ் என்கிற மாசிலாமணி என்று மாற்றம் செய்யப்பட்ட பிறகும், அதில் மாஸ் என்ற ஆங்கில வார்த்தை இடம்பெற்றுள்ளதை பலரும் சுட்டிக்காட்டியதால் அதையே காரணம் காட்டி மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது மாஸு என்கிற மாசிலாமணி என்று மாற்றம் செய்தனர். இரண்டு தினங்கள் இந்தப்பெயரில்தான் விளம்பரங்கள் வெளிவந்தன.
இந்நிலையில் மீண்டும் தலைப்பில் மாற்றம் செய்தனர். அதாவது மாஸு என்கிற மாசிலாமணி என்ற தலைப்பை மாசு என்கிற மாசிலாமணி என மாற்றம் செய்தனர். படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பு வரை இப்படி பல தடவை பெயர் மாற்றம் செய்ய என்ன காரணம்? மாஸ் பேய்ப்படம் என்பதால் அந்தப் படத்துக்கு சென்சாரில் ஏ அல்லது யுஏ சர்ட்டிஃபிகேட்தான் கொடுப்பார்கள், அதனால் நிச்சயமாக வரிவிலக்குக் கிடைக்காது என்ற எண்ணத்தில்தான் மாஸ் என்ற ஆங்கில வார்த்தையை டைட்டிலாக வைத்துள்ளனர்.
படம் முடிந்து ஃபர்ஸ்ட்காப்பி பார்த்தபோதுதான்... மாஸ் படத்தில் ஹாரர் படத்துக்கான ரத்தம் வழியும் வன்முறையோ, கவர்ச்சியான காட்சிகளோ இல்லை என்பதை கவனித்துள்ளனர். இதனால் படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும், அதன் காரணமாக வரிவிலக்குக் கிடைக்கும் என்பதையும் புரிந்து கொண்டு சமயோஜிதமாக முடிவு செய்து கடைசி நேரத்தில் தலைப்பில் மாற்றம் செய்து தமிழ் டச் கொடுத்துவிட்டனர். அப்படி செய்த காரணத்தினால் வரிவிலக்கு என்ற பெயரில் கூடுதலாக பல கோடிகள் லாபமாக கிடைக்க உள்ளது.