சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்குப்பட அதிபர் சி.கல்யாண் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தபோது சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியது. தன் பதவிக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா செய்த உதவியை எண்ணி புளகாங்கிதப்பட்டார் அப்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தார் சி.கல்யாண்.
தற்போது அவர் சர்வானந்த், நித்யா மேனன் நடிப்பில் நீ நான் நாம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் துவக்கத்தில் ஜெயலலிதா அரசின் நான்கு ஆண்டு சாதனைகளை விளக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு செய்திப் படத்தை இணைத்திருக்கிறார். அதில் ஜெயலலிதாவை முதல்வராகவே சித்தரித்திருக்கிறார். இதில் ஆச்சர்யமான விஷயம்... பெங்களுருவில் நடைபெற்ற சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே, ஜெயலலிதா அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் அடங்கிய செய்திப்படத்துடன் கூடிய நீ நான் நாம் படத்துக்கு சென்சார் சர்ட்டிஃபிகேட் வாங்கிவிட்டார் கல்யாண்.
ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றதை முன்னிட்டு, எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் வருகிறார் அம்மா வருகிறார் என்ற பாடல் தயார் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் பர்சனல் செக்யூரிட்டி ஆபிசர்களில் ஒருவரான கருப்பசாமி என்பவர் இந்தப்பாடலை எழுதினாராம். இந்தப் பாடலை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தயார் செய்து கொடுத்ததாம். பின்னணியில் இருந்து இந்த பாடல் உருவாகவும் கல்யாண்தான் காரணமாம். இவரைப் பார்த்து இன்னும் எத்தனை நிர்வாகிகள் அம்மாவுக்கு காவடி எடுக்கப்போறாங்கன்னு தெரியலையே...!