சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விநியோகஸ்தர் சங்கத்தலைவராக இருப்பவர் கலைப்புலி ஜி.சேகரன். ஏற்கனவே பல படங்களை தயாரித்துள்ள இவர், தற்போது ஒரு பூ ஒரு துப்பாக்கி என்றொரு படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆனால் அப்படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் பயந்து கொண்டிருப்பதாக கூறுகிறார். மேலும் அவர் கூறும்போது, ஒரு காலத்தில் சினிமாவில் இருந்தவர்கள் நேர்த்தியாக தொழில் செய்து வந்தனர். ஆனால் இப்போது புதியவர்கள் சினிமாவிற்குள் நுழைந்து சினிமாவை கெடுத்து விட்டனர்.
அழகான மீடியாவான சினிமாவில் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம் என்ற நிலை வந்தபோது, ரசிகர்களை கருத்தில் கொள்ளாமல் அவரவர் விருப்பம் போல் படமெடுக்கின்றனர். இதனால் மக்கள் தியேட்டருக்கு வருவதேயில்லை. அந்த அளவுக்கு புதிதாக வந்தவர்கள் சினிமாவை கண்டம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சில நல்ல படங்கள்கூட ஓடுவதில்லை. சினிமாவில் நீண்ட காலம் இருந்து வரும் நான், ஒரு பொறுப்பில் இருக்கிறேன். என்றாலும், தற்போது நான் தயாரித்த படத்தை வெளியிடகூட எனக்கு பயமாக உள்ளது என்று கூறிய ஜி.சேகரன், சினிமாவில் தொழில் சுதந்திரம் இருந்தாலும், நிறைய சட்டதிட்டங்கள் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்கிறார்.