‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் |
காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்தப் படத்தை கோபி என்பவர் இயக்கி, தயாரித்திருந்தார். இந்தப் படம் பைனான்ஸ் பிரச்சினையால் நின்றபோது கஞ்சா கருப்பு தனது சொத்துக்களை கொடுத்துள்ளார். அதை வைத்து கடன் வாங்கி படத்தை முடித்து வெளியிட்டவர்கள் சொத்தை மீட்டுத் தராமல் ஏமாற்றி விட்டனர் என்று கஞ்சா கருப்பு போலீசில் புகார் செய்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையை நேற்று சந்தித்து அளித்த புகார் மனுவில் கஞ்சா கருப்பு கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை இயக்குனர் கோபியும், நிர்வாக தாரிப்பாளர் காளையப்பன் என்பவரும் இணைந்து தயாரித்தனர். அதில் நான் நடித்தேன். பணப் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றபோது கோபியும், காளையப்பனும் என் மனைவி சங்கீதா, மைத்துனர் சந்தோஷ்குமார் ஆகியோருடன் பேசி எங்களுக்கு சொந்தமான சொத்து பத்திரங்களை பெற்று அதனை வைத்து 30 லட்சம் வரை கடன் பெற்றனர். படம் வெளியிடுவதற்கு முன் சொத்துக்களை மீட்டு தந்து விடுவதாக கூறினார்கள். ஆனால் படம் வெளியான பிறகும் பேசியபடி சொத்துக்களை மீட்டுத் தரவில்லை. எனவே எனது சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்த புகார் குறித்து துணை சூப்பிரண்டு ராமசாமி விசாரணை நடத்தி வருகிறார்.