Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் சொத்துக்களை வாங்கி ஏமாற்றி விட்டார்கள்: கஞ்சா கருப்பு போலீசில் புகார்

15 மே, 2015 - 01:02 IST
எழுத்தின் அளவு:
Kanja-Karuppu-complaint-against-Velmurugan-Borewells-director

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்தப் படத்தை கோபி என்பவர் இயக்கி, தயாரித்திருந்தார். இந்தப் படம் பைனான்ஸ் பிரச்சினையால் நின்றபோது கஞ்சா கருப்பு தனது சொத்துக்களை கொடுத்துள்ளார். அதை வைத்து கடன் வாங்கி படத்தை முடித்து வெளியிட்டவர்கள் சொத்தை மீட்டுத் தராமல் ஏமாற்றி விட்டனர் என்று கஞ்சா கருப்பு போலீசில் புகார் செய்துள்ளார்.


சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையை நேற்று சந்தித்து அளித்த புகார் மனுவில் கஞ்சா கருப்பு கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை இயக்குனர் கோபியும், நிர்வாக தாரிப்பாளர் காளையப்பன் என்பவரும் இணைந்து தயாரித்தனர். அதில் நான் நடித்தேன். பணப் பற்றாக்குறையால் படம் பாதியில் நின்றபோது கோபியும், காளையப்பனும் என் மனைவி சங்கீதா, மைத்துனர் சந்தோஷ்குமார் ஆகியோருடன் பேசி எங்களுக்கு சொந்தமான சொத்து பத்திரங்களை பெற்று அதனை வைத்து 30 லட்சம் வரை கடன் பெற்றனர். படம் வெளியிடுவதற்கு முன் சொத்துக்களை மீட்டு தந்து விடுவதாக கூறினார்கள். ஆனால் படம் வெளியான பிறகும் பேசியபடி சொத்துக்களை மீட்டுத் தரவில்லை. எனவே எனது சொத்துக்களை மீட்டுத்தர வேண்டும். என்று அந்த மனுவில் கூறியுள்ளனர். இந்த புகார் குறித்து துணை சூப்பிரண்டு ராமசாமி விசாரணை நடத்தி வருகிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)