சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இயற்கை, ஈ படங்களைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் பேராண்மை. இந்த படத்தில் அவர் ஜெயம்ரவியை நடிக்க வைத்தபோது, சாக்லேட் பாய் அவரைப்போய் எப்படி ஆக்சன் கதையில் நடிக்க வைக்கப்போகிறீர்கள்? ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? என்று சிலர் கேள்வி கேட்டார்கள். அதற்கு, அவர் இதற்கு முன்பு நடித்த கதைகள் அப்படி. அதனால் அந்த இமேஜ் விழுந்திருக்கிறது. ஆனால் இந்த கதையில் நடித்தால் ஜெயம்ரவியின் இமேஜே மாறிவிடும் என்று சொல்லித்தான் பேராண்மையில் அவரை நடிக்க வைத்தார். அவர் சொன்னது போலவே அந்த படம் ஜெயம்ரவியின் இமேஜை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அதையடுத்து ஆக்சன் கதைகளுக்கு அவரை அணுகத் தொடங்கினார்கள் இயக்குனர்கள்.
அதேபோல்தான் இப்போது புறம்போக்கு படத்திலும், ரொமான்டிக் ஹீரோவான ஆர்யாவை புரட்சியாளனாக நடிக்க வைத்திருக்கிறார். இதையடுத்தும், ஒரு ஜாலியான நடிகரை, இப்படி புரட்சிக்காரனாக மாற்றினால் எப்படி ரசிகர்கள் ஏற்பார்கள்? என்று கேள்வி ஜனநாதனை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அவர் தரும் பதில், கதைகளும், கேரக்டர்களும்தான் நடிகர்களின் இமேஜை உருவாக்குகின்றன. இதுவரை ஆர்யா நடித்த கதைகள் வேண்டுமானால் ரசிகர்கள் மத்தியில் அவரை ஒரு ஜாலியான நடிகர் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கலாம்.