சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜீவாவின் சினிமா கேரியரை சிங்கம்புலிக்கு முன்பு சிங்கம்புலிக்கு பின்பு என இரண்டாக பிரிக்கலாம். காரணம், அதற்கு முன்பெல்லாம் அவரது படங்களில் வசனங்கள் ரொம்ப டீசன்டாக இருக்கும். ஆனால் அதன்பிறகு படத்துக்குப் படம் மச்சி, பச்சி என்று லோக்கல் தமிழில் பேசி நடித்தார்.
இதனால் கோடம்பாக்கத்தில் ஜீவாவை மச்சி நடிகர் என்று அடைமொழி வைத்து அழைக்கத் தொடங்கி விட்டனர். ஆனால், ஒருகட்டத்தில் ஜீவாவுக்கே இது பிடிக்கவில்லை. தன்னைத்தேடி வரும் டைரக்டர்களெல்லாம் மச்சி என்ற வசனத்தை வலுக்கட்டாயமாக திணித்ததால் தடுமாறிக்கொண்டு வந்தார்.
இந்தநிலையில்தான், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கிய யான் படம் அவருக்கு கிடைத்தது. அந்த படத்தில் தனது வழக்கமான டயலாக்குகள் எதுவும் இல்லாமல் டீசன்டாக பேசி நடித்தார். அதோடு, இப்போது கவலை வேண்டாம், திருநாள் போன்ற படங்களில் நடிக்கும் ஜீவா, இந்த படங்களின் டைரக்டர்களிடமும் இனிமேற்கொண்டு டீசன்டான நடிகராக விரும்புகிறேன். அதனால் அந்த மச்சி, பச்சி டயலாக்குகளை தவறியும் சேர்த்து விடாதீர்கள் என்று பர்சனலாக கேட்டுக்கொண்டாராம்.