மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? |
சென்னை: தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னையால், நடிகர் கமலின், உத்தம வில்லன் படம், தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்து, சென்னை மற்றும் திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வழக்கு:நடிகர் கமல்ஹாசன் - பூஜாகுமார் நடிப்பில், உத்தம வில்லன் படம் உருவாகி உள்ளது. ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமியின், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கமலின், விஸ்வரூபம் படத்தை, டி.டி.எச்., வசதியில் வெளியிட முயன்றபோது, தியேட்டர் உரிமையாளர்கள் பிரச்னை செய்ததால், சந்தை போட்டி அமைப்பில், கமல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தியேட்டர் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை கமல் தான் செலுத்த வேண்டும் என, தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், இப்பிரச்னைக்கு முடிவு காணப்படாத வரை, உத்தம வில்லன் படத்தை வெளியிட மாட்டோம் எனக் கூறி, படத்திற்கு, ரெட் கார்டு போடப்பட்டது. இப்பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைக்க, தியேட்டர் உரிமையாளர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் கேட்டதாக தகவல் வெளியானது. இதனால், உத்தம வில்லன் பட தயாரிப்பாளர் ஆத்திரப்பட்டார். சினிமா சங்கங்களிடம் புகார் செய்தார். சினிமா சங்கங்களின் கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு, தமிழகம் முழுவதும், மே, 1ம் தேதி, உத்தம வில்லன் படம் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், திட்டமிட்டபடி நேற்று, படம் வெளியிடப்படவில்லை. படத்தின் தயாரிப்பாளர், பைனான்சியர் சிலர் இடையே, திடீர் பிரச்னை ஏற்பட்டதே இதற்கு காரணம். தமிழகம் முழுவதும், நேற்று காலை சிறப்பு காட்சி பார்க்க வந்த ரசிகர்கள், படம் திரையிடப்படாததால் ஆத்திமடைந்தனர். தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில், உட்லாண்ட்ஸ் தியேட்டர்; திருச்சியில், ரம்பா தியேட்டர் முன், ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்பிரச்னையை சுமுகமாக தீர்க்க, தயாரிப்பாளர் - பைனான்சியர்கள் இடையே, சென்னையில் பேச்சு நடந்தது. ஆனால் இரவு, 9:00 மணி வரை உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், இன்றும் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் ரிலீஸ்:சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் திட்டமிட்டபடி, உத்தம வில்லன் படம், நேற்று வெளியானது. இதனால், திருட்டு வி.சி.டி., வெளியாகி, தமிழகத்தில், வசூல் பாதிக்கப்படும் என, தயாரிப்பாளர் கவலை அடைந்துள்ளார்.
ரஜினி மகள் படத்திற்கு அதிர்ஷ்டம்!தமிழகத்தில், உத்தம வில்லன் படம், 400 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. இத்துடன், நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடித்த, வை ராஜா வை படம், 350 தியேட்டர்களில் வெளியானது. உத்தம வில்லன் படம் திட்டமிட்டபடி வெளியாகாததால், அதற்கான, 250 தியேட்டர்களில், வை ராஜா வை படம் கூடுதலாக திரையிடப்பட்டது.
நாளை வெளியீடு? இந்த விவகாரம் குறித்து நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறுகையில், உத்தம வில்லன் பட விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. நாளை படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.