அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
குரு, ராவணன், கடல் என தொடர் தோல்விகளுக்கு பிறகு ஓகே கண்மணியின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மணிரத்னம். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டில் படக்குழுவினருக்கு பார்ட்டி வைத்து வெற்றியை கொண்டாடினார். தன் படத்தின் வெற்றிக்காக இப்படி தன் வீட்டில் மணிரத்னம் பார்ட்டி வைப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள். ஓகே கண்மணியின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படத்தை உடனே ஆரம்பிக்கிறார்.
தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் அடுத்து அவர் இந்தி, தமிழில் படம் தயாரிக்கிறார். ஹீரோ தனுஷ் என்பது முடிவாகி இருக்கிறது. ஹீரோயின் ஆலியாபட்டாக இருக்கலாம். இதற்கான பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது. தமிழ் நாட்டில் இருந்து மும்பைக்கு பிழைக்கச் செல்லும் இளைஞன் அங்கு ஒரு இந்திப் பெண்ணை காதலிப்பதும் அது தொடர்பாக வரும் பிரச்சினைகளும்தான் கதை என்கிறார்கள். மணிரத்னம் ஸ்டைலில் புதிய கோணத்தில் உருவாக இருக்கிறது. ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, ஏ.ஆர்.ரகுமான் இசை என்பதும் அப்படியே தொடர்கிறது.