சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பொதுவாக மீடியாக்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பவர் மணிரத்னம். தன்னுடைய படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மட்டும் மீடியாக்களிடம் பேச முன் வருவார். அப்படி பேசும்போது தன் படம் பற்றி மட்டுமின்றி பிற விஷயங்கள் பற்றியும் பேசுவார்.
அதன்படி தன்னுடைய ஓ காதல் கண்மணி படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனபோது, அதற்கு முன்னதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார்.
பிரபல வாரப்பத்திரிகை ஒன்றுக்கு மணிரத்னம் பேட்டியளித்தபோது, இளம் இயக்குநர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும்போது, இளம் இயக்குநர்களில் தன்னைக் கவர்ந்தவர் கார்த்திக் சுப்பராஜ் என்று கூறி இருக்கிறார். மணிரத்னத்தின் இந்தக் கருத்து ஏனைய இளம் இயக்குநர்களை கொந்தளிக்க வைத்துவிட்டதாக கேள்வி.