ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? |
லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்துள்ள உத்தம வில்லன் படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என திரையரங்க அதிபர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் அறிவித்தனர். இப்பிரச்சனைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் சங்கம், கில்டு, வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் அடங்கிய தமிழ்த் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர், இயக்குனர் லிங்குசாமி, "உத்தம வில்லன் வெளியீடு தொடர்பாக சில பிரச்சனைகள் இருந்தன. அவற்றை சுமூகமாகத் தீர்த்துக் கொண்டோம். விஸ்வரூபம் பிரச்சனையை உத்தம வில்லன் படத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற செலவுகளை நாங்களே ஏற்பதாக தெரிவித்துள்ளோம்." என லிங்குசாமி கூறினார். அதோடு, உத்தம வில்லன் பிரச்சனை முடிந்துவிட்டது. படம் திட்டமிட்டபடி வெளியாகும் என சொல்லப்பட்டது. இதையடுத்து உத்தம வில்லன் படத்தின் வெளியீட்டு வேலையில் லிங்குசாமி தரப்பு பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள சிலர், யாருடைய கட்டளைக்கும் அடிபணிய மாட்டோம். விஸ்வரூபம் விவகாரத்தில் முடிவு தெரியும்வரை ஏற்கனவே திட்டமிட்டபடி உத்தமவில்லன் படத்தை வெளியிடவிட மாட்டோம் என மீடியாக்களை அழைத்து அறிவிக்க உள்ளனர்.