சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்த நந்திதா மீண்டும் அவருடன் இணைந்து இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்திருக்கிறார். அதோடு சில காட்சிகளில் இதுவரையில்லாத இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தி கைதட்டலும் பெற்றிருக்கிறாராம் நந்திதா. அதனால் இடம்பொருள் ஏவல் நந்திதாவின் நடிப்புக்கு புதிய அங்கீகாரம் கொடுக்கும் என்று அப்படக்குழுவினர் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதனால் மிகப்பெரிய பூரிப்பில் இருந்து வருகிறார் நந்திதா. மேலும், தற்போது உப்புக்கருவாடு படத்தில் தன்னைச்சுற்றியே மொத்த கதையும் பின்னப்பட்டிருப்பதால் இன்னும் ஈடுபாடு காண்பித்து அப்படத்தில் நடித்து வருகிறாராம் நந்திதா. அதனால் இந்த படத்திற்கு பிறகு தனக்கு கோலிவுட்டில் பெரிய இடம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார் நடிகை.
ஆனபோதும், இதுவரை தமிழில் 7 படங்களில் நடித்து விட்ட அவர், இன்னமும் சென்னையில் குடியேறாமல் ஹோட்டல் வாசமே மேற்கொண்டு வருகிறார். இதற்கு என்ன காரணம்? என்று நந்திதாவைக் கேட்டால், என் தாய்மொழியான கன்னடத்தில் கிடைக்காத வரவேற்பு எனக்கு தமிழில்தான் கிடைத்திருக்கிறது. அதனால் தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் நான் ரொம்பவே மதிக்கிறேன்.
அதேசமயம், நான் பிறந்து வளர்ந்ததெல்லாமே பெங்களூரில் என்பதால், அங்குதான் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். அதனால்தான் ரிலாக்ஸ் பண்ண வேண்டும் என்று தோன்றினால் உடனே பெங்களூருக்கு பறந்து விடுகிறேன். அங்கு சென்று எனது ஆத்மார்த்தமான தோழிகளுடன் சில நாட்கள் ஜாலியாக பொழுதை கழித்து விட்டு மீண்டும் சென்னை வருகிறேன் என்று சொல்லும் நந்திதாவுக்கு சென்னையில் நிரந்தரமாக குடியேறும் எண்ணமெல்லாம் துளியும் இல்லையாம். மார்க்கெட் இருக்கிறவரை ஹோட்டலில் தங்கியிருந்து நடித்து விட்டு படங்கள் குறைகிறபோது பெங்களூருக்கு சென்று விட வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருக்கிறாராம்.