அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
முன்னாள் கதாநாயகி நடிகையான ரேவதி சென்னையிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து அங்கே செட்டிலான பிறகு தமிழ்ப்படங்களையே மறந்துவிட்டார். மலையாளத்தில் நடித்து வந்தவர் கடந்த சில வருடங்களாக மலையாளத்திலும் அதிகமாக படங்களில் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் மித்ர மை ப்ரண்ட் என்ற ஆங்கிலப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக மாறினார் ரேவதி. அந்தப்படத்துக்குக் கிடைத்த பாராட்டுகளைத் தொடர்ந்து, ஃபிர் மிலிங்கே, மும்பை கட்டிங் என இரண்டு ஹிந்திப்படங்களையும் இயக்கினார்.
பின்னர் கேரளா கஃபே என்ற மலையாளப்படத்தையும் இயக்கிய ரேவதி, அப்படத்துக்குப் பிறகு வேறு படங்கள் இல்லை. அதனால் ரேவதி பற்றி ஊடகங்களில் செய்தியும் இல்லை. இதற்கிடையில் நடிப்புக்கு முழுக்குப்போட இருக்கிறார் என ரேவதி பற்றி ஒரு தகவல் அடிபட்டது. தற்போது ரேவதி பற்றி புதிய செய்தி. தனது ஐந்தாவது படத்தை விரைவில் ரேவதி இயக்குகிறார் என்பதே அந்த செய்தி. சிறுகதை ஒன்றை தழுவி இந்தப்படத்தை இயக்க இருக்கிறாராம்.