சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கில் கடந்த சில வருடங்களாக அங்குள்ள ரசிகர்களை தூங்க விடாமல் தவிக்க வைத்த சமந்தா, இப்போதுதான் அவருடைய பார்வையை தமிழ்ப் பக்கம் திருப்பியிருக்கிறார். சூர்யா, விஜய் ஆகியோருடன் நடித்ததைத் தொடர்ந்து விக்ரமுடன் தற்போது '10 எண்றதுக்குள்ளே' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தான் கடினமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சமந்தா சொல்லியிருக்கிறார். இதுவரை தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்தப் படத்தின் கதாபாத்திரம்தான் மிகவும் கடினமானது. 2015ல் இன்னும் இம்மாதிரியான பல கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா இதுவரை நடித்துள்ள பல தெலுங்குப் படங்கள் அவருக்கு வெற்றிகரமான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. ஆனாலும், அதிலெல்லாம் அவர் ஈஸியாகவே நடித்துவிட்டார் போலிருக்கிறது, அவருடைய நடிப்புத் திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரம் எதுவும் அமையவில்லை என்றும் தெரிகிறது.