சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பன்றிக்காய்ச்சல் என்ற கொடிய நோய் நாடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியும் உள்ளார்கள். சமீபத்தில்கூட தனுசுடன் ராஞ்சனா படத்தில் நடித்த இந்தி நடிகை சோனம் கபூர், சல்மான்கானுடன் ஒரு இந்தி படப்பிடிப்புக்காக குஜராத் சென்றிருந்தபோது அவரை பன்றி காய்ச்சல் தாக்கியது. அதைத் தொடர்ந்து உடனடியாக குஜராத் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிசிசை அளிக்கப்பட்டு தற்போது மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து நடிகர் நடிகைகள் மத்தியில் பன்றிக்காய்ச்சல் பீதி அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழில் அப்பாடக்கர் படத்தில் நடித்து வரும் ஜெயம்ரவி-த்ரிஷா இருவரும் காட்சிகளில் நடித்து முடித்ததும் தங்களது முகத்திற்கு கவசம் அணிந்து கொளகிறார்கள். அதோடு, மற்றவர்களையும் முக கவசம் அணிந்து பன்றி காய்ச்சல் வராமல் தப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் உஷார்படுத்தி வருகிறார்கள்.