அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
மணிரத்தினத்தின் காதல் படங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அவர் இயக்கிய அலைபாயுதே, திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு தெரியாமல் வாழும் காதலர்களை பற்றியது. இப்போது அவர் இயக்கி உள்ள ஓ காதல் கண்மணியும் அதுபோன்ற ஒரு புரட்சிகரமான காதல் கதை என்கிறார்கள்.
ஆதி (துல்கர் சல்மான்) தாராவை (நித்யா மேனன்) தீவிரமாக காதலிக்கிறார். அவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார். ஆனால் துல்கருக்கு திருமண வாழ்க்கையில் உடன்பாடில்லை. திருமணம் செய்யாமலேயே ஒரு ஆணும், பெண்ணும் கடைசி வரை சேர்ந்து வாழ முடியும் என்ற கருத்து உடையவர். நித்யாமேனனும், அவரது குடும்பமும் திருமண சடங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள். இறுதியில் வெல்வது காதலா? கல்யாணமா என்பதுதான் கதை என்கிறார்கள்.
ஓ காதல் கண்மணியில் துல்கர் சல்மானுடன், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன், கனிகா நடித்திருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்தினத்துடன் ஏ.ஆர்.ரகுமான் இணையும் 12வது படம். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணியாற்றுகிறார். பிருந்தா நடனம் அமைத்துள்ளார், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது, படம் ஏப்ரல் வெளியீடு.