சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாடலாசிரியை தாமரை, தன்னை விட்டு சென்ற தன் கணவர் தியாகுவை சேர்த்து வைக்க கோரி தியாகுவின் அலுவலகம் முன் தன் மகனுடன் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். சூளைமேட்டில் உள்ள தியாகுவின் அலுவலகம் முன் இரண்டு நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்.
தியாகு நான் எங்கும் ஓடிப்போகவில்லை. வேளச்சேரியில் உள்ள எனது மகள் வீட்டில்தான் இருக்கிறேன் என்று கூறினார். இதனால் நேற்று (மார்ச் 1) மூன்றாவது நாளாக வேளச்சேரியில் தியாகு தங்கி உள்ள அவரது மகள் சுதாகாந்தியின் வீட்டு முன் தர்ணா போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையில் இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் சில தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் தாமரையுடன் இனி சேர்ந்து வாழவே முடியாது பல சோதனைகளுக்கு பிறகு நான் எடுத்த முடிவு இது. சட்ட ரீதியாக பிரிவதா? சமூக ரீதியாக பிரிவதா என்பதை தாமரைதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார் தியாகு.