ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்கா படம் வெளியான மூன்றாவது நாளில் இருந்தே கலெக்சன் இல்லை என்று அந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கொடி பிடிக்கத் தொடங்கி விட்டனர். விளைவு, ஒரு வாரத்துக்கு தியேட்டரில் ஹவுஸ்புல்லாக இருக்கும். அதனால், ஒரு வாரம் கழித்து படத்தை பார்க்கலாம் என்று நினைத்திருந்த ரசிகர்கள்கூட அதன்பிறகு தியேட்டருக்கு செல்லவில்லை.
ஆக, லிங்கா படம் ஓடவில்லை தோல்வியடைந்து விட்டது என்று அதன்பிறகு தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டைக்கேட்டு அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். பின்னர், ரஜினிக்கு நெருக்கமானவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போது மெகா பிச்சை போராட்டத்தை நடத்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் பிரச்சினை பெரிய அளவில் சூடு பிடித்து நிற்கிறது. கூடவே, ரஜினிக்கு ஆதரவாக களமிறங்க அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருக்கிறர்கள். ஆனால், இந்த நேரத்தில், சரத்குமார், விஜய் இருவரும்தான் ரஜினியை நஷ்டஈடு தர விடாமல் தடுப்பதாக இன்னொரு செய்தியும் ஓடிக்கொண்டிருக்கிறது.