சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விரைவில் இசை என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருப்பவர் எம்.எஸ்.ராம். ஏராளமான விளம்பர படங்கள், குறும் படங்களுக்கு இசையமைத்து விட்டு இந்த படத்தில் இசையமைப்பாளராகியிருக்கும் இவர் , முதல் படத்திலேயே 7 வித்தியாசமான சூழலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு மட்டுமின்றி பின்னணி இசையமைப்பதற்கும் சவாலான காட்சிகள் கிடைத்துள்ளன. அதனால், இந்த படத்திலேயே சிறப்பான முத்திரை பதிககும் அளவுக்கு எனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறேன என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த படத்தில் முதலில் ஒரு இரண்டு லைன் பாடல் வரிகளை கொடுத்து எனனை டெஸ்ட் பண்ணினார் டைரக்டர் வி.எஸ்.பிரபா. அப்போது தப்பாட்டம் தப்பாட்டம் வாழ்க்கை ஒரு தப்பாட்டம் என்ற பாடலின் வரிகளை கொடுத்தார். அது குத்துப்பாட்டு மாதிரி இருந்தாலும் எமோஷனலான பாடல். அதனால் துள்ளலாக அதேசமயம் சற்று எமோசனலான டியூனை போட்டுக்காட்டியபோது அவருக்கு பிடித்து விட்டது. அதன்பிறகுதான் எனக்கு இசையமைககும் வாய்ப்பு கிடைத்தது.
அதோடு, இந்த படத்தில் மொத்தமுள்ள 7 பாடல்களுமே சிச்சுவேசனில் உள்ளது. அதனால் நானும் கதையோடு கலந்து பீல் பண்ணி இசையமைத்திருக்கிறேன். அதாவது மெலோடி, பார்ஸ்ட் பீட் என எல்லா சாயலிலும பாடல்கள் உள்ளன. அதேசமயம், பாஸ்ட் பீட் பாடலாக இருந்தாலும் அதிலும் ஒரு மெலோடி வைத்துதான் பாடல்களை உருவாக்கியிருக்கிறேன். காரணம், எப்போதுமே மெலோடி பாடல்கள்தான் மனதில் நிற்கும்.
முக்கியமாக இந்த படத்தில் ஏ நண்பா ஏ நண்பா என்றொரு பாடல் உள்ளது.முழுக்க முழுக்க சினிமாவில் போராடுபவர்களின் பிரச்சினைகளை சொல்லும் பாடல., அவர்களின் வலியை சொல்லும் வரிகள். சினிமாவோட ஆன்தமாக இதை சொல்லலாம். சினிமாவைச்சேர்ந்த கலைஞர்கள் யாராக இருந்தாலும், இந்த பாடலை அவர்களின் ஆன்தமாகவே பாடலாம். அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல். அந்த வகையில் எனது முதல் படத்திலேயே சினிமாக்காரர்களின் வாழ்க்கையை சொல்லும் ஒரு பாடலுக்கு இசையமைக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது. பெருமையாகவும் உள்ளது என்கிறார் இசையமைப்பாளர் எம்.எஸ்.ராம்.