சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அழகும், திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லையே என்று புலம்புகிறார் நடிகை டாப்சி. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வௌ்ளாவி பொண்ணு டாப்சி. தொடர்ந்து, ''வந்தான் வென்றான்'', ''ஆரம்பம்'' படங்களில் நடித்தவர் இப்போது ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்கும் ''முனி-3 கங்கா'' படத்திலும், கௌதம் கார்த்திக்கின் ''வை ராஜா வை'' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
இதனிடையே தெலுங்கு படங்களிலும் நடித்த டாப்சி, சமீபத்தில் இந்திக்கும் சென்றார். மூன்று மொழி நடிகையான பின்னரும் டாப்சிக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லை, இதனால் விரக்தியில் இருக்கிறார் டாப்சி. அந்த விரக்தியை இப்படி கூறியுள்ளார். அதாவது, என்னிடம் அழகும் இருக்கிறது, திறமையும் இருக்கிறது. ஆனால் படங்கள் பெரிதாக இல்லை, இது எனக்கு வருத்தத்தை தருகிறது. படித்துமுடித்து விட்டு பெரிய தொழிலதிபராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் என் தலையெழுத்து சினிமாவுக்கு வந்துவிட்டேன். இந்த துறையை தேர்ந்தெடுத்தது தவறோ என்று உணர்கிறேன் மேலும் இந்த சினிமாவிற்கு வந்ததற்காக வருத்தமும் அடைகிறேன் என்று கூறியுள்ளார்.