சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மும்பை:பிரபலமான ஈரான் திரைப்பட இயக்குனர் மஜித் மஜிதி இயக்கும் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர், ஏ.ஆர்.ரஹ்மான். 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்ததன் மூலம், ஆஸ்கர் விருதையும் பெற்றார். சில மாதங்களுக்கு முன், ஈரானிய மொழி திரைப்பட இயக்குனரான மஜித் மஜிதியை சந்தித்து பேசினார். மஜிதி, ஈரான் மொழியில் வெளியாகி, உலகம் முழுவதும் பாராட்டை பெற்ற, 'சில்ரன் ஆப் ஹெவன், தி கலர் பாரடைஸ்' போன்ற படங்களை இயக்கியவர். இவரின் சில படங்களுக்கான இசைப் பதிவு, சென்னையில் நடந்தது.
ரஹ்மானுடனான சந்திப்பின்போது, 'நீங்கள் மேற்கத்திய இசையையும், மேற்கத்திய இசைக் கருவிகளையும் அதிகம் பயன்படுத்துவது ஏன்? உங்கள் பாரம்பரிய இசைக் கருவிகளையும் பயன்படுத்தலாமே' என, மஜிதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரஹ்மான், 'வாய்ப்பு வரும் போது, இந்திய பாரம்பரிய இசைக்கு முக்கியத்துவம் அளிப்பேன்' என்றார்.
இந்நிலையில், மஜிதி இயக்கும் புதிய ஈரான் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது இசை அமைத்து வருகிறார். இதற்கான பாடல் பதிவு, பிரான்சின், பாரீஸ் நகரில் சமீபத்தில் நடந்தது.
இது தொடர்பான புகைப்படத்தை ரஹ்மான், தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
'சில்ரன் ஆப் ஹெவன்':*மஜித் மஜிதி இயக்கி, 1997ல் வெளியான, 'சில்ரன் ஆப் ஹெவன்' படம், சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது.
*ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சகோதரனுக்கும், சகோதரிக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்தும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
*சகோதரியின் காலணி தொலைந்து போவதால் ஏற்படும் பிரச்னைகளையும், அதை சமாளிப்பதற்காக இருவரும் மேற்கொள்ளும் தந்திரங்களையும், ஈரானில் நிலவும், ஏழை - பணக்காரக் குடும்பப் பாகுபாட்டையும் இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டியது.
*இந்த படத்துக்கு பின் தான், ஈரான் படங்களுக்கு சர்வதேச அளவில் மரியாதை கிடைத்தது.
*மற்ற மொழிகளைச் சேர்ந்த திரைப்படத் துறையினர், ஈரான் படங்களை காப்பியடித்து படம் எடுக்கும் நடைமுறையும் உருவானது.