அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
இர்பான், அருந்ததி நாயர், அர்ச்சனா, சிங்கம்புலி நடித்த படம் பொங்கி எழு மனோகரா. ரமேஷ் ரங்கசாமி இயக்கி உள்ளார், சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், கண்ணன் இசை அமைத்துள்ளார் பல மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்தப் படம் வெளிவர தியேட்டர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக இன்று (ஜன 30) வெளிவருவதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்து விளம்பரம் செய்து வந்தார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் அ.செ.இப்ராஹிம் ராவுத்தரின் புலன் விசாரணை 2, மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் டூரிங் டாக்கீஸ் ஆகிய படங்கள் வெளிவரவே இருபெரும் தயாரிப்பாளர்களுக்கிடையே மனோகராவால் பொங்கி எழ முடியவில்லை.
திரையிட ஒப்புக் கொண்ட தியேட்டர்காரர்கள் கடைசி நேரத்தில் சாரி... சொல்லிவிட்டார்கள். 30ந் தேதி படம் ரிலீஸ் என்று லட்சக்கணக்கில் செய்த விளம்பர செலவெல்லாம் வீணாகிப்போக கலங்கி நிற்கிறார் தயாரிப்பாளர். அடுத்த தேதியைகூட அவரால் உறுதியாக அறிவிக்க முடியவில்லை.